Friday, August 22, 2008

ஆர் யூ சிங்கிள்?

சுதந்திரம் வாங்கி 61 வருஷம் ஆயிருச்சி.ஆனால் ஒரு கன்னிப் பையன்/பேச்சுலர் தனியா ஒரு ஊருக்கு ட்ரெயின்ல போயிட்டு வர முடியலை.நாம தனியா வர்ரதை பாத்தாலே இவங்களுக்கு எல்லாம் என்ன ஆகுமோ? அதுவும் சின்ன பையனா வேறா இருந்துட்டா போதும்.உடனே பக்கதுல வந்து கேக்குற முதல் கேள்வி"ஆர் யூ சிங்கிள்?".ஆமாங்க ஒரு தடவை ரெண்டு தடவை இல்லை,எப்ப நான் ட்ரெயின்ல போகும் போது எங்கிட்ட கேக்குற கேள்வி இது.

தமிழ் தெரிஞ்சவங்க தமிழில கேக்குறாங்க.இல்லைனா இப்படி இங்கிலீஷ்ல கேக்குறாங்க.யாரு கேக்குறாங்கனு கேக்குறீங்களா? ஒரு பையன்கிட்ட யாரு இந்த கேள்வி கேப்பாங்க? ஏன் கேக்குறாங்க? எதுக்கு கேக்குறாங்க? இப்படி உங்களுக்கு நிறைய கேள்வி எங்கிட்ட கேட்க தோணும்.அது ஏங்க எங்கிட்ட மட்டும் எல்லாரும் இவ்வள்வு கேள்வி கேக்குறீங்க?

சரி சரி.ரொம்ப நேரம் மொக்கை போடுறேனோ? சொல்றேன்.முதல் கேள்வி- யாரு கேக்குறாங்க? அதிகமா இந்த கேள்வியை எங்கிட்ட கேக்குறது பெண்கள்தான்.அதுவும் குடும்ப பெண்கள்தான்.சில சமயம் ஆண்களும் கேக்குறதும் உண்டு.அதுவும் அவங்க கூட வந்த பெண்களில் ஒருவரின் சார்பாக இவர் கேப்பார்.அடுத்த கேள்விகள் - ஏன் கேக்குறாங்க? எதுக்கு கேக்குறாங்க?அவங்களுக்கு அப்பர் பெர்த் அலாட் ஆயிருக்கும். என் கொடுமைக்கு எனக்கு லோயர் பெர்த் அலாட் ஆயிருக்கும்.பெர்த்த மாத்திக்கலாமுனு கேக்குறதுக்கு முன்னாடிதான் இவ்வளவு பில்டப்போட "ஆர் யூ சிங்கிள்?"னு ஆரம்பிப்பாங்க:).

ஆமாங்க. ஏன்டா நாம ரிஷர்வேஷ்ன் பண்றோமுன்னு தோணுற மாதிரி சில சமயம் "நாங்க குடும்பத்தோட வந்திருக்கோம்.வேற வேற கோச் போட்டுட்டாங்க" அப்படினு சொல்லி பொட்டி படுக்கையோட 5 கோச் மாறி போக சொல்லுவாங்க.நாமளும் லொங்கு லொங்குனு மாறி போனா அங்கே இருக்குற TTR உன் கோச்சுல போய் என்ட்ரி போட்டுட்டு வான்னு அலைய விடுவாரு.கோச் மாறி போறதுல இன்னொரு பிரெச்சனையும் இருக்கு.அங்கேயும் ஒருத்தன் "ஆர் யூ சிங்கிள்?"னு ஆரம்பிப்பான்.

போன தடவை இன்னும் கொடுமை.யாருமே எங்கிட்ட எதுவும் கேக்கலை.லோயர் பெர்த் வேற.போர்வையை போத்தி சந்தோஷமா தூங்கிட்டிருந்தேன்.ஒரு பதினொரு மணிக்கு ஒருத்தன் என்னை எழுப்பி அந்த கேள்வியை கேட்டுட்டான்:(. நீங்களே சொல்லுங்க, இந்த சுதந்திர இந்தியாவில நான் ரிசர்வ் பண்ண பெர்த்ல போறதுக்கு எனக்கு உரிமை இல்லையா?



2 comments:

Anonymous said...

கலங்கிட்டீங்க...

Nilavan said...

கொடுமை கொடுமைன்னு வேற கோச்சுக்கு போனா, அங்கே ஒரு கொடுமை ஏதோ திங்கு திங்குன்னு ஆடுச்சாம் கதைதான் ஆனந்து....

என்றும் நட்புடன்,
நிலவன்,

http://eerththathil.blogspot.com

Post a Comment

Blog Widget by LinkWithin