Friday, June 19, 2009

’இ’ராமர்

”எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்”,கரட்டாண்டி.


“என்ன உண்மை தெரிஞ்சாகனும்? நீ மனுசனா இல்லையானா? இல்லைன்னு ஊருக்கே தெரியுமே”,கட்டையன்.


“நான் மனுசன் இல்லை. தெய்வம்னு எனக்குத் தெரியுமே”,கரட்டாண்டி.


“இப்படியே பேசிட்டு இருந்தேனா ஒரு நாள் உன்னைய பொணமாக்கிட்டு உன் போட்டோவுக்கு மாலை போட்டு தெய்வமாக்க போறாங்க”,கட்டையன்.

“சரி அதை விடு. ராமரோட அப்பா பேரு என்னான்னு சொல்லு”,கரட்டாண்டி.

“இதெல்லாம் ஒரு கேள்வியா? தசரதன்னு சின்ன பிள்ளையக் கேட்டாக்கூட சொல்லும்”,கட்டையன்.

“அது சின்ன பிள்ளைக்கும் தெரியும்.உன்னை மாதிரி வளந்த கிடாவுக்கும் தெரியும். ராம்ரோட அப்பா பேரு தசரதன்னா ‘த’ராமர்ன்னுல எழுதனும்.ஏன் ‘இ’ராமர்ன்னு எழுதுறாங்க?”,கரட்டாண்டி.

கட்டையன் மனசுக்குள் ‘இவன்கிட்ட ஒழுங்கா பதில் சொன்னா அடுத்து எடக்கு மடக்கா இன்னொரு கேள்வி கேட்பான்.இவனுக்கு வேற மாதிரிதான் பதில் சொல்லனும்’.“அது இந்த U.S போய்ட்டு வந்தவங்க U.S ரிட்டன்னு போட்டுக்கறது இல்லையா? அந்த மாதிரிதான் இதுவும்”,கட்டையன்.

“புரியலையே”,கரட்டாண்டி.

“ராமர் இலங்கைக்கு போய் சீதையை காப்பாத்திக் கூட்டிட்டு வந்ததால இலங்கை ரிட்டன் ராமர்.அதைதான் சுருக்கி ‘இ’ராமருன்னு எழுதறாங்க”,கட்டையன்.

“ஓ! அதுதான் லட்சுமணனைக் கூட ‘இ’லட்சுமணன்னு எழுதறாங்களா?”,கரட்டாண்டி.

“சரியா புரிஞ்சுக்கிட்டியே”,சிரித்துக் கொண்டே கட்டையன்.

“சரி. அப்புறம் ஏன் ராவணனையும் ‘இ’ராவணன்னு எழுதுறாங்க?”,கரட்டாண்டி.

கட்டையன் மனசுக்குள் ‘ஆரம்பிச்சுட்டாண்டா’. “ம்ம். அது வந்து...”,கட்டையன்.

“மாட்டிக்கிட்டியா? இழுக்காம பதிலை சொல்லுடா”,கரட்டாண்டி.

“அங்.சீதாவைக் கடத்துறதுக்காக ராவணன் இந்தியாவுக்கு வந்துட்டுப் போனான்ல.அதனால இந்தியா ரிட்டன் ராவணன். ‘இ’ராவணன்னு எழுதுறாங்க.எப்பூடி?”,கட்டையன்.

“நீ சொல்றது எல்லாம் சரின்னா சீதாவை மட்டும் ஏன் சீதான்னு எழுதுறாங்க. ‘இ’சீதான்னுல எழுதனும்? எப்பூடி?”,கரட்டாண்டி.

கட்டையன் மனசுக்குள் ‘விடமாட்டேங்கறானே’. “ராமர் இந்தியாவுல இருந்துக்கிட்டே உண்ணாவிரதம் இருந்தோ,பந்த் நடத்தியோ இல்லை ரெண்டு மூணு பேர் தீக்குளிச்சோ போராட்டம் பண்ணி அதனால ஒருவேளை ராவணன் மனசு மாறி சீதாவை அவனே கொண்டு வந்து விட்டுருந்தா இலங்கை ரிட்டன் சீதா ‘இ’சீதான்னு எழுதிருபாங்க.ஆனா ராமர் இலங்கைக்கு போய் போர் செஞ்சுல மீட்டுட்டு வந்தார்.சீதாவுக்கு ராமர் இருக்குமிடந்தான் அயோத்தின்னு சொல்லுவாங்கள.சீதாவை ராவணன் கடத்திட்டு போனப்போ அது சீதாவுக்கு இலங்கை.போருக்காக ராமர் இலங்கை வந்ததும் அது சீதாவுக்கு அயோத்தி ஆயிருச்சு.அதனால ‘இ’சீதான்னு எழுதிறதில்லை”,கட்டையன். மனசுக்குள் ‘ஸ்ஸ்ஸ்.இப்பவே கண்ணை கட்டுதே’.

“அப்ப ...”,கரட்டாண்டி.

“டேய் நிறுத்துடா!.நீதான் கேனைனா இதை படிக்கிறவனும் கேனையா?பாவம்டா அவங்க. விட்டுடுடா”,கட்டையன்.

3 comments:

வசீகரா said...

Superb Thinking da. its so clear that... you dont have any works to do :). me too thats why I read you blog :) - Manikandan

Raghav said...

நல்ல நகைச்சுவை.. :)

நன்றாக சிரித்தேன்.
-இராகவன்.

தகடூர் கோபி(Gopi) said...

அப்ப சீதையை 'அ'சீதைன்னு கூப்பிடனுமா?

:-))))))))

Post a Comment

Blog Widget by LinkWithin