Wednesday, July 23, 2008

இடி மின்னல், கோலம்

பள்ளி பருவத்தில் தோன்றிய கவிதைகளை(ஹைக்கூ போல் இருக்கும்) இங்கு பதிவு செய்கிறேன்.

கார்கில் யுத்தம் நடந்தபோது எனக்கு தோன்றிய கவிதை:

இடி மின்னல்
மேகங்கள் செய்யும் யுத்தம்
வானிலும் எல்லை
மீறலோ?

கல்வி
கற்றவன் நனவு
கல்லாதவன் கனவு
இருவருக்கும் இன்றது
செலவு!




இந்த கவிதை படித்ததா இல்லை எனக்கு தோன்றியதா என்று நினைவில் இல்லை. ஆனால் என்றும் என் நினைவை விட்டு நீங்கா கவிதை.

கோலம்
புள்ளியில் வரைந்த கவிதை
புனைந்த தேவதை
யாரோ?



2 comments:

chandru / RVC said...

// புள்ளியில் வரைந்த கவிதை
புனைந்த தேவதை
யாரோ? //
இப்படி உசுப்பேத்தியே பொண்ணுங்கள காலி பண்ணிடுங்கப்பா :))

A said...

@rvc
வருகைக்கு நன்றி.

என்னதான் பொண்ணுங்களை உசுப்பேத்தினாலும் கடைசியா காலியாகறது பசங்கதான் :(

Post a Comment

Blog Widget by LinkWithin